சான்ட்விட்ச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Sep 27, 2022, 6:24 AM IST

Updated : Sep 27, 2022, 6:57 AM IST

Etv Bharat கேண்டீனில் உணவு பாதுகாப்பு துறை சோதனை

ராணிப்பேட்டையில் உள்ள உணவகம் ஒன்றில் சான்ட்விட்ச் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே கோட்டைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் சாலமன். இவர் தனது குடும்பத்துடன் ராணிப்பேட்டைக்கு சென்றிருந்தார். அப்போது பஜார் வீதியிலுள்ள ரஷீத் என்ற தனியார் உணவகத்தில் தேநீர் அருந்துவதற்காக சென்றனர்.

அப்போது சாலமனும் அவரது மனைவி ரூபியும் தேநீர் சாப்பிட்ட நிலையில் அவர்களது மகன்கள் மூவரும் சான்ட்விட்ச் ஆர்டர் செய்து சாப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து வீட்டிற்குச் சென்றதும் சிறுவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

உணவு பாதுகாப்பு துறை சோதனை

அப்போது, உணவு ஒவ்வாமை ஏற்பட்டதே இதற்குக் காரணம் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், காவல் துறையினர் உதவியோடு உணவகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உணவு தயார் செய்யும் இடத்திலிருந்து நிறத்தை கூட்ட பயன்படும் ரசாயன நிறமிகளை பறிமுதல் செய்தனர். மேலும், கடையில் இருந்த சான்ட்விட்ச்மற்றும் இதர உணவு பொருள்களை சோதனைக்காக எடுத்துச் சென்றதோடு, உணவகத்தை தற்காலிகமாக பூட்டி சென்றனர்.

இதையும் படிங்க: நள்ளிரவில் பெண்கள் விடுதியில் புகுந்த கஞ்சா போதை ஆசாமி

Last Updated :Sep 27, 2022, 6:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.