காலிக்குடங்களுடன் வாலாஜாபேட்டையில் பொதுமக்கள் சாலைமறியல்

author img

By

Published : Dec 25, 2022, 5:29 PM IST

Etv Bharat

முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் வாலாஜாபேட்டை நகராட்சியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

காலிக்குடங்களுடன் வாலாஜாபேட்டையில் பொதுமக்கள் சாலைமறியல்

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை நகராட்சியின் கச்சா நாயக்கர் தெரு, 19ஆவது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீரானது விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

எனவே, இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வாலாஜா நகராட்சி அலுவலகம் முன்பு இன்று (டிச.25) சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முறையாக குடிநீரை வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக வாலாஜா-சோளிங்கர் மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து போக்குவரத்துகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன. மேலும், இதனைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார், நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: ரோப் காரை இயக்க மறுத்த ஒப்பந்த ஊழியர்கள் - பழனியில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.