தைப்பூசத்தை முன்னிட்டு எருகாட்டும் விழா நடத்திய சொரையூர் கிராமத்தினர்

author img

By

Published : Jan 18, 2022, 9:40 PM IST

erukattum ceremony near soraiyur village

ராணிப்பேட்டை அருகே தைப்பூசத்தை முன்னிட்டு பாரம்பரிய எருகாட்டும் விழாவை சொரையூர் கிராம மக்கள் நடத்தினர்.

ராணிப்பேட்டை: பழைய சொரையூர் பகுதியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஊரின் குலதெய்வமான பொன்னியம்மன் திருவிழா மற்றும் எரு காட்டும் நிகழ்ச்சி தொன்றுதொட்டு பாரம்பரியமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 18) எருகாட்டும் விழா அக்கிராம மக்களால் விமரிசையாக நடத்தப்பட்டது.

இந்த எருதுகாட்டும் திருவிழாவில் சீறிப் பாய்ந்த காளைகளை சொரையூரைச் சுற்றியுள்ள மாம்பாக்கம், மேல்புதுபாக்கம், ஆரூர், பொன்னமங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்து வந்த கிராம மக்கள் கண்டு மகிழ்ந்ததோடு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: இனி வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.