ஆவதம் கொலை வழக்கு: 6 பேர் கைது

author img

By

Published : Jun 30, 2021, 11:40 AM IST

கொலை

ஆவதம் பகுதியில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ராணிப்பேட்டை: அரக்கோணத்தை அடுத்த ஆவதம், மின்னல் காலனியைச் சேர்ந்தவர் பஸ்வான். இவர் ஜூன் 28ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஆவதம் பகுதியில் உள்ள பெட்ரோல் சேமிப்பு நிலையம் அருகே ஒரு கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலைசெய்தது.

இச்சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிந்து நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 29) இந்த வழக்கில் தொடர்புடைய மேல்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியான அன்பரசு (24), சூர்யமூர்த்தி (22), சிவா (22), அஜித் என்கிற சதீஷ் (24), விக்னேஷ் (21), கிருஷ்ணமூர்த்தி (18) ஆகிய ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கொலை
கொலை

கைதான ஆறு பேரிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.