பாத்திரத்தினுள் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை.. நடந்தது என்ன?

author img

By

Published : Oct 9, 2022, 9:57 AM IST

Updated : Oct 9, 2022, 10:28 AM IST

ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம்.. அடுத்து நடந்தது என்ன?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதில் இருந்து, மருத்துவர்கள் போராடி அக்குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே உள்ள விசாலாட்சி தெருவைச் சேர்ந்தவர், ஜோனா (30). இவருக்கு ஒன்றரை வயதில் ஜோவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஜோவினின் தலையில் சாப்பாடு வைக்க பயன்படும் பாத்திரம் (குண்டான்) சிக்கியுள்ளது.

பின்னர் இதுகுறித்து பெற்றோர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள், குழந்தையை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

பாத்திரத்தினுள் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை.. நடந்தது என்ன?

அங்கு மருத்துவர்கள், ஜோவினின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை வெட்டி எடுத்து, குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: பானிபூரிக் கடையில் காசு தராததால் தகராறு ; பானிபூரி வியாபாரி கொலை

Last Updated :Oct 9, 2022, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.