மின் கம்பங்களை அகற்றாமல் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்

author img

By

Published : Nov 23, 2022, 9:02 PM IST

மின்கம்பங்களை அகற்றாமல் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்

லப்பைப்பேட்டை கிராமத்தில் மின்கம்பங்களை அகற்றாமல் அப்பகுதியில் கால்வாய் கட்டப்பட்டுள்ளதால், அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த லப்பைப்பேட்டை கிராமத்தில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கால்வாய் அமைக்கும் பாதையில் இருந்த இரு மின்கம்பங்களை அகற்றாமல் அப்படியே கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

இதனால் கால்வாய்களுக்கு நடுவே மின்கம்பம் உள்ளதால், கழிவு நீர் செல்லும் போது அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, கால்வாய்க்கு நடுவே உள்ள மின்கம்பங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின்கம்பங்களை அகற்றாமல் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்

இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் அரசு ஊழியர்கள் இருவர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.