பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

author img

By

Published : Sep 25, 2021, 9:34 AM IST

புயல் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொண்டி, திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த ஒருவார காலமாக மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது.

வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் வங்கக் கடலில் ஒடிசாவின் கோலாப்பூரிலிருந்து 670 கி.மீ கிழக்கு தெற்காகவும், ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டிணத்திலிருந்து 740 கி.மீ கிழக்காகவும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ராமநாதபுரம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் பகுதிகளில் காற்றின் வேகம் சற்று கூடுதலாக இருந்து வருவதுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

இதையும் படிங்க: பள்ளி மாணவியைக் கடத்திய இளைஞர் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.