மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை - சிறை சென்ற முதியவர்

author img

By

Published : Sep 22, 2021, 1:43 PM IST

மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை

ராமநாதபுரம்: மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், சேரான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராக்கம்மாள் (80). வாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்த இவரை 2018ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மகன் முத்துமாரி (69) பாலியல் வன்புணர்வு செய்தார்.

இது குறித்து ராக்கம்மாள் கொடுத்த புகாரின்பேரில் ராமேஸ்வரம் துறைமுகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, முத்துமாரியைக் கைதுசெய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த முத்துமாரிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதித்து மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஏ. சுபத்ரா உத்தரவிட்டார்.

மேலும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: நீலாங்கரை காவல் ஆய்வாளருக்குப் பிடியாணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.