இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை ஆட்சியராக சென்றதால் அவருக்கு பதிலாக கோபால சுந்தரராஜன் ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் இராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் மீண்டும் அவருக்கு பதிலாக ஜூன் மாதம் 17 ஆம் தேதி சந்திரகலா ஐஏஎஸ் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.
அவர் பொறுப்பேற்று பணி செய்து வந்த நிலையில் திடீரென கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி நீண்ட விடுப்பில் செல்வதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் பொறுப்பு மாவட்ட ஆட்சியராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு வணிக வரி இணை ஆணையராக பணியாற்றிய சங்கர் லால் குமாவாட் இராமநாதபுரம் புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக மூன்று மாதங்கள் மட்டுமே சந்திரகலா மாவட்ட ஆட்சியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 4 மாதங்களில் ஏற்கனவே இரு ஆட்சியர்கள் மாற்றப்பட்ட நிலையில், 3வது ஆக சங்கர் லால் குமாவாட் நியமிக்கப்பட்டுள்ளது குறப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைப் பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை - மக்கள் பீதி