'குவார்ட்டர் விலை ஏறிடுச்சு... அநியாயமா இருக்குப்பா...' அமைச்சரிடம் Thug Life செய்த குடிமகன்

author img

By

Published : May 2, 2022, 5:17 PM IST

கிராமசபை கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு

ராமநாதபுரத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் ’குவார்ட்டர் விலை ஏறிப்போச்சி அநியாயமாக இருக்கு’ எனக் கூட்டத்தில் இருந்த குடிமகன் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த நிலையில் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

ராமநாதபுரம்: கடலாடி அருகேவுள்ள காவாகுளம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டார்.

கிராம சபைக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த மதுப்பிரியர் ஒருவர், ’ஒரு குவார்ட்டர் விலை 200 ரூபாய்க்கு அநியாயமாக விற்கப்படுவதாக’ அமைச்சரிடம் புகார் தெரிவித்தார்.

போதையில் ரகளை செய்த குடிமகன்

இதனைக் கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர் அவரைக் கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..அதிர்ச்சியடைந்த இசைப்புயல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.