சிறுவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு!

author img

By

Published : Dec 30, 2021, 11:43 AM IST

Updated : Dec 30, 2021, 11:51 AM IST

pudukottai-gun-shot-issue

புதுக்கோட்டையில் துப்பாக்கிப் பயிற்சியின் போது தவறுதலாக சிறுவன் மீது குண்டு பாய்ந்த நிலையில் தற்போது மருந்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை: நார்த்தாமலை அருகே சிஐஎஸ்ஃப் வீரர்களில் துப்பாக்கிப் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பயிற்சி மையத்தில் வழக்கம் போல் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

அப்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசுத் தலைமை மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்குச் சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி:அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்

Last Updated :Dec 30, 2021, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.