வேந்தன்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

author img

By

Published : Feb 8, 2021, 6:43 AM IST

furious-bulls-at-venthanpatti-jallikkatu

புதுக்கோட்டை: வேந்தன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 550க்கும் மேற்பட்ட மாடுகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் நேற்று (பிப்.07) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகளை அலுவலர்கள், விழாக் குழுவினர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன.

வேந்தன்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், வீரர்கள் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, ஃபேன், மேசை, கட்டில், தங்க காசு, மிக்ஸி, குக்கர் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: வதந்திகளை பரப்புவது கருத்து சுதந்திரம் அல்ல - பிரகாஷ் ஜவடேகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.