புதுக்கோட்டை தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு - 44 பேர் காயம்

author img

By

Published : Jan 14, 2022, 10:51 AM IST

jallikattu

புதுககோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 44 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை: 2022 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் நேற்று (ஜனவரி 13) நடைபெற்றது. இதில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கிவைத்தனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் அவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் இருந்தால் மட்டுமே களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர். தொழுவத்திலிருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர்.

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 44 பேர் காயம்

இந்நிலையில் காளைகள் முட்டியதில் 44 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.