'உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்' - சசிகலா

author img

By

Published : Apr 11, 2022, 6:15 PM IST

Updated : Apr 11, 2022, 7:32 PM IST

’உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’ - சசிகலா

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய விவகாரம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

நாமக்கல்: ஆஞ்சநேயர் கோயிலில் சசிகலா இன்று(ஏப்.11) சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

'உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்' - சசிகலா

அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ''உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்” என்ற ஒற்றை வரி பதிலை மட்டுமே தெரிவித்தார்.

முன்னதாக ஆஞ்சநேயர் கோயிலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்று, அவருக்கு ரோஜா பூ மாலை அணிவித்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'பீஸ்ட்' படக்குழுவினரை தன் 'ரோல்ஸ் ராய்ஸ்' காரில் அழைத்துச்சென்ற நடிகர் விஜய்!

Last Updated :Apr 11, 2022, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.