தேர்வு பயத்தால் கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை

author img

By

Published : Sep 13, 2021, 9:41 PM IST

namakkal student suicide

நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு பயம் காரணமாக கல்லூரி மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஈகாட்டூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(20) தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு இன்று(செப்.13) செயல்முறை தேர்வு நடைபெறவிருந்தது. இதற்காக தீவிரமாக படித்துவந்த நிலையில், காலை கல்லூரிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் இவர் வீடு திரும்பததால் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது, மாம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே அவரது பை, அடையாள அட்டை ஆகியவை கிடந்துள்ளன. உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்த வீரர்கள் 20 நிமிடம் தேடி உடலை மீட்டனர். தற்போது மாணவன் உடல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்

Helplines

  • Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours)
  • State suicide prevention helpline – 104 (24 hours)

இதையும் படிங்க: நீட் மரணம் - தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு நிதியளித்த உதயநிதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.