நாமக்கல்லில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை

author img

By

Published : Oct 11, 2021, 7:49 PM IST

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது

நாமக்கல்லில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு வருபவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என எழுதி வைக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்ட கடைக்கு வந்த குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மது வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இது குறித்து டாஸ்மாக் அலுவலர்களிடம் கேட்டபோது, “பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தடுப்பூசி குறித்து மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது

தடுப்பூசி செலுத்தியவர்களுக்குகே மது பாட்டில்

அந்த வகையில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யும் நடைமுறை இன்று (அக்.11) முதல் அமலுக்கு வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

டாஸ்மாக் கடையின் அறிவிப்பு
டாஸ்மாக் கடையின் அறிவிப்பு

மேலும், “டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம், தகுந்த இடைவெளி ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ஓசியில் சரக்கு தராத டாஸ்மாக் விற்பனையாளரின் முகத்தை வெட்டிய மதுப்போதை ஆசாமிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.