காவல் நிலையத்தின் கேட்டில் பூட்டிற்குப்பதிலாக கைவிலங்கை வைத்து பூட்டியதால் சர்ச்சை

author img

By

Published : Aug 23, 2022, 9:29 PM IST

காவல் நிலையத்தின் கேட்டில் பூட்டிற்கு பதிலாக கைவிலங்கை வைத்து பூட்டியதால் சர்ச்சை!

குமாரபாளையத்தில் காவல் நிலையத்தின் கேட்டில் பூட்டிற்குப் பதிலாக கைவிலங்கு பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்: குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தின் பக்கவாட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளான வாகனங்கள் உட்பட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள கேட்டிற்கு பூட்டு போடாமல் காவல் நிலையத்தில் உள்ள கைதிகளுக்கு, பயன்படுத்தக்கூடிய கைவிலங்கினைக் கொண்டு பூட்டாக போட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய கைவிலங்கை, மாற்றாக பொதுப்பயன்பாட்டிற்கு காவலர்கள் பயன்படுத்தி இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளதுடன் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. இதனால் கேட்டில் உள்ள கைவிலங்கை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், கைவிலங்கை தவறாகப் பயன்படுத்திய நபர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கேட்டிற்கு கைவிலங்கு பயன்படுத்திய நிலையில், தற்போது குமாரபாளையம் காவல் நிலையத்திலும் கேட்டிற்கு கைவிலங்கு பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இட்தையும் படிங்க:5 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்.. சென்னை காவல் ஆணையர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.