மனைவியிடம் தகாத முறையில் நடந்த கும்பல்... தட்டிக் கேட்ட கணவருக்கு அடி உதை... வேடிக்கை பார்த்த போலீசாருக்கு நன்றி...

author img

By

Published : Aug 13, 2022, 9:20 PM IST

Etv Bharat மனைவியிடம் தகராறு செய்தவர்களிடம் தட்டிக்கேட்ட கணவர்

திரையரங்கில் மனைவியிடம் தகாத முறையில் நடந்தவர்களை கணவர் தட்டிக்கேட்டபோது அவரை அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இதனை வேடிக்கை பார்த்த காவல் துறையினருக்கு அவர் நன்றி எனக்கூறி நகர்ந்த வேதனை சம்பவம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியிலுள்ள தனியார் திரையரங்கில் விருமன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரையரங்குக்கு கணவன் மனைவி இருவர் நேற்று இரவுக்காட்சிக்கு சென்றுள்ளனர். இவர்களது இருக்கைக்கு அருகிலிருந்து ஐந்து பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளது. இதனை தட்டிக்கேட்ட பெண்ணின் கணவரும் கும்பலால் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் கும்பல் தாக்கும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதனிடையே அந்த பெண் கும்பலிடமிருந்த தனது கணவரை காப்பற்ற முயன்று மயக்கமடைந்து கீழே விழுகிறார்.


இறுதியாக அந்த கும்பல் அங்கிருந்து செல்கிறது. வாங்கிய அடியுடன் தனது தோளின் மீது மனைவியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட கணவர், காவலர்களிடம் எங்களை காப்பாற்றமல் இருந்ததற்கு நன்றி எனக் கூறிவிட்டு செல்கிறார். இந்த வீடியோ மிகுந்த வேதனையளிக்கும்படி உள்ளது.

இதையும் படிங்க: யூடியூப் பார்த்து கொள்ளையடித்த பட்டதாரி காதல் ஜோடி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.