கொலை செய்ய வந்த இடத்தில் தர்ம அடி வாங்கிய ரவுடி

author img

By

Published : Sep 17, 2021, 9:25 AM IST

கொலை செய்ய வந்த ரவுடிக்கு தர்ம அடி

சீர்காழி அருகே சாராய வியாபாரியை கொலை செய்ய வந்த ரவுடியை, மடக்கிப் பிடித்த பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.

மயிலாடுதுறை: சீர்காழி அகர திருக்கோலக்கா தெருவைச் சேர்ந்தவர் சாராய வியாபாரி பாபு. இவரை கொலை செய்வதற்காக சீர்காழியைச் சேர்ந்த ரவுடி கட்டை ராஜா உள்ளிட்ட நான்கு பேர் பாபுவின் வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இதனைக் கண்ட பாபுவும், அவரது குடும்பத்தினரும் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அங்கு, நான்கு பேர் கையில் கத்தி, அரிவாளுடன் இருப்பதைக் கண்ட அவர்கள், ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்தனர்.

கொலை செய்ய வந்தவருக்கு தர்ம அடி

பின்னர், ஊர் மக்கள் ஒன்றுகூடி அவர்களை விரட்டினர். அப்போது, கட்டை ராஜா மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

கொலை செய்ய வந்த ரவுடிக்கு தர்ம அடி

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல் துறையினர், கட்டை ராஜாவை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருச்சியில் பரபரப்பு - டிரைவர் வெட்டிக் கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.