பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணி பரப்புரையாளர் தற்கொலை

author img

By

Published : Sep 9, 2021, 12:03 PM IST

தூய்மைப் பணி பரப்புரையாளர்

தூய்மைப் பணியில் பரப்புரையாளராகப் பணியாற்றிய நான்கு பெண் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதில் மனமுடைந்து விஷம் குடித்த பெண் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை: குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதாரப் பரப்புரையாளர்களாக வேலை பார்த்துவந்தனர்.

  • வீடுகள்தோறும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வுசெய்வது,
  • டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து பேரூராட்சிக்குத் தகவல் சொல்வது,
  • வீடுகள்தோறும் மக்கும் குப்பை-மக்காத குப்பை என்று தரம் பிரித்துத்தர அறிவுறுத்துவது

போன்றவை இவர்களது பணிகளாகும். கடந்த ஏழு ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றிவந்த இவர்களது ஒப்பந்தம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இந்த நான்கு பேரையும் வேலையிலிருந்து நீக்கிவிட்டு திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு அந்தப் பணிகள் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, மீண்டும் அந்தப் பணியைத் தங்களுக்கே வழங்க வேண்டும் எனப் பெண்கள் கோரிவந்த நிலையில், வேலைபோனதால் மனமுடைந்த நதியா வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். உயிருக்குப் போராடிய அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் சகப் பணியாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி பெண் காவலர் பாலியல் வன்கொடுமை: நீதி கேட்டு பேரணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.