பாஜகவினரை கைது செய்த காவல் துறையினர்

author img

By

Published : Dec 2, 2021, 5:42 PM IST

காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி பாஜக-வினர் மாட்டுவண்டி பேரணி நடத்தியதால், 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மயிலாடுதுறை: பெட்ரோல், டீசல் விலையை உயர்வைத் தமிழ்நாடு அரசு குறைக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்டம் மண்மேட்டில் பாஜகவினர்‌ மாட்டுவண்டி பேரணி நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்ட பாஜக விவசாய அணித் தலைவர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், மாநிலச்செயலாளர் தங்க.வரதராஜன் கலந்து கொண்டு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து முழக்கமிட்டு, 50-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டியில் பேரணியாக வந்தார்.

இந்நிலையில், மணல்மேல் காவல் துறையினர் மாட்டுவண்டி பேரணிக்கு அனுமதி இல்லை, மீறி நடத்தினால் கைது செய்வோம் என பேரணியைத் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்

இதையடுத்து மாட்டு வண்டி பேரணியை விலக்கிக்கொண்ட பாஜகவினர் மணல்மேல் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தமிழ்நாடு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 100 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்பை அனுமதித்த அலுவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.