'எங்களுடைய பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆ.ராஜா செயல்படுகிறார்' - செல்லூர் ராஜூ

author img

By

Published : Sep 22, 2022, 8:08 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு

'ராஜா என்ற பெயர் பிரச்சினையான பெயர் இல்லை; என்னுடைய பெயர் கூட ராஜா தான். ஆனால், எங்களுடைய பெயர்களுக்கு களங்கம் விளைக்கும் வகையில் ஆ. ராஜா செயல்படுகிறார்' என செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.

மதுரை: முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், மதுரை மேற்குத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் கே. ராஜூ தனது தொகுதிக்கு உட்பட்ட பைகரா பகுதியில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வில் கலந்துகொண்டார்.

அப்போது பைகாரா மாநகராட்சிப்பள்ளியில் செய்தியாளர்களைச்சந்தித்துப்பேசினார். அப்போது, 'ராஜா என்ற பெயர் பிரச்னையான பெயர் இல்லை. என்னுடைய பெயர் கூட ராஜா தான். ஆனால், எங்களுடைய பெயர்களுக்கு களங்கம் விளைக்கும் வகையில் ஆ. ராஜா செயல்படுகிறார்.

இது போன்ற பிள்ளையை பெற்றதற்கு அவரின் தாய் தான் வருத்தப்பட வேண்டும். இவ்வளவு பிரச்னைகள் நடந்த போதும் திமுக தலைவர் பாராமுகமாக அமைதியாகவுள்ளார். ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ள சூழலில் மேலும் இதனை பாதிப்படையும் வகையில் பேசி வருகின்றனர். ஆ. ராஜா எப்போதும் வருத்தம் தரும் வார்த்தைகளை உதிர்க்கிறார். ஏற்கெனவே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு குறித்து தவறாகப் பேசினார். தற்போது இப்படி பேசியுள்ளார்.

எனவே ஆ. ராஜாவுக்கு திமுக, தலைவர் வாய்ப்பூட்டு சட்டம் போட வேண்டுகிறேன். அப்போது தான் திமுக-விற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பும் இருக்கும். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டுவரி உயர்வு உள்ளிட்டவற்றை மறைப்பதற்காக ஆ. ராஜா பேச வைக்கப்படுகிறாரா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏன் முதலமைச்சர் ஆ. ராஜா விசயத்தில் வாய் மூடி மெளனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை.

இதுவே, அதிமுகவினர் இப்படி பேசியிருந்தால் கடுமையாக நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்திருக்கும். 2 ஜி அலைக்கற்றைத் தொடர்பான ஊழலில் பெரும் பகுதியை அவர் கொடுத்திருப்பார் போல... அதனால் அவரை கண்டிக்க பயம் கொள்கின்றனர் என எண்ணுகிறேன். திமுக, எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அடிதடியை கையில் எடுக்கும். மதுரையில்கூட ஒரு தாசில்தாரை திமுக, தொண்டரணியைச் சேர்ந்த நபர் செவ்வியைச்சேர்த்து அடித்தார்.

இதுபோன்ற பல்வேறு வன்முறைச்சம்பவங்களை திமுக-வைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்துவார்கள். எங்கள் ஆட்சியில் நாங்கள் சொல்வதை காவலர் ஏட்டுக்கூட கேட்கமாட்டார்கள். ஆனால் திமுக, ஆட்சியில் டிஎஸ்பி-யை டீ வாங்கிட்டு வரச்சொல்லி அராஜகம் செய்வார்கள். இதுபோன்ற சம்பவம் திமுக, வந்தால் எப்போதும் மாறாது. திமுக ஆட்சியில் ஸ்டாலின் ஆட்சி வந்தாலும் உதயநிதி வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறும்' என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு

தொடர்ந்து, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ராமேஸ்வரம் தீர்த்தவாரியில் குளித்து சாமி தரிசனம் செய்துகொண்டது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், 'இதை ஆ. ராஜாவிடம் தான் கேட்க வேண்டும். அதேபோல் ஆக்டிங் முதலமைச்சராக செயல்பட்டு வரும் சபரீசன் ஊர், ஊராக கோயிலுக்குச்செல்கிறார். துர்கா ஸ்டாலின் செல்கிறார். இதற்கெல்லாம் ஆ. ராஜா என்ன சொல்வார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அறிஞர் அண்ணா சொன்னார். இதையெல்லாம் தாங்கும் இதயம் தான் ஸ்டாலினிடம் உள்ளதுபோல' எனத் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாகத்திறன் குறித்த கேள்விக்கு, 'ஸ்டாலினுக்கு நிர்வாகத்திறன் இருக்கா என தெரியவில்லை. ஆனால், கட்டப்பஞ்சாயத்து, ஊழல் பெருகிப்போனது. அதேபோல் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. போதை வஸ்துக்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. பள்ளிக்கூடங்களில் அருகே போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக மதுரையில் நீதிபதியிடமே புகார் வந்துவிட்டது. அதனை நீதிபதி தலைமையில் முதலமைச்சர் அமைத்த குழுவே குற்றம்சொல்கிறது.

இது வெட்கக்கேடானது. இதையும் மூடி மறைக்கிறார் முதலமைச்சர். இதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை" ( கண்ணீர் வடிப்பது போல் கிண்டல் அடித்தார்.) "இந்த ஆட்சியில் நிர்வாகச்சீர்கேடு இருப்பதற்கு பள்ளிக் குழந்தைகளே சாட்சியாக இருக்கின்றனர். அவர்களுக்கு கொடுக்கும் சீருடை கூட சரியில்லை. அது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முன்பே நடந்துவிட்டது' என்றார்.

தென்காசி பாஞ்சான்குளம் கிராமத்தில் நடைபெற்ற சாதியப் பாகுபாடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், 'இது ஒரு அருவெறுக்கத்தக்க சம்பவம். தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட வித்தியாசமானது. அண்ணன், தம்பி போல பழகிவரும் நம்மிடம் இப்படியான சம்பவம் நடைபெறுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் செயல்படுகின்றன.

அவையெல்லாம் அகதிகளாக போய்விட்டனரா? கே. பாலகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் அமைதியாக இருப்பது ஏன்? வெளியூர்களுக்கு சென்றுவிட்டனரா ? தேர்தல் சீட்டுக்காக திமுகவிடம் அமைதியாக இருக்கின்றனர். தற்போது பல்வேறு வகையான காய்ச்சல் பரவி வருகிறது. இதனைத் தடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: உங்கள் துறையில் முதலமைச்சர்...காவல்துறையினரிடம் மனுக்களை பெற்ற முதலமைச்சர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.