மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இதற்காக அவனியாபுரம், திருப்பரங்குன்றம் சாலையில் வாடிவாசல் அமைப்பதற்காக தென்னை மர தூண்கள் நடும் பணிகள், பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு தடுப்பு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் மாடுபிடி வீரர்களுக்கு அவனியாபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் நாளை (ஜனவரி 8) மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. அவனியாபுரத்தில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.