மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான உறுப்புக் கல்லூரி ஒன்று மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ளது. இக்கல்லூரியின் பொருளாதாரத் துறைத்தலைவர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த ஆடியோவில் மாணவர் ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதே கல்லூரியில் சேர்ந்த சில மாணவர்கள் துறைத் தலைவர் மீது குற்றம் சாட்டி புகார் கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள ஆடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அந்த மாணவர், கல்லூரியில் மாணவர்களிடம் சாதிய பாகுபாடு பார்க்க படுவதாகவும் கட்டணம் என்ற பெயரில் அதிக வசூல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு தங்களது பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என அந்த மாணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - EWS நடைமுறையை வாபஸ் பெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழகம்!