கிருஷ்ணகிரி மயிலாடும்பாறை அகழாய்வு - மூன்று கால் சுடுமண் குடுவைகள் கண்டெடுப்பு

author img

By

Published : Jul 28, 2021, 8:43 AM IST

Updated : Jul 28, 2021, 11:44 AM IST

சுடுமண் குடுவைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக நடைபெறும் அகழாய்வில் மூன்று கால்கள் கொண்ட சுடுமண் குடுவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பாக 2020-21ஆம் ஆண்டுக்கான அகழாய்வு கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை பகுதியில் புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்கால பண்பாட்டினை கண்டறியும் பொருட்டு அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெருங்கற்காலத்திற்கு சான்றாக கற்பதுக்கை ஒன்று அகழாய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறும்போது, "இந்தக் கல்பதுக்கையில் உள்ள தொப்பி கல்லானது சுமார் 3.88 மீட்டர் வட்ட வடிவிலான அளவுடையது. அதனை அப்புறப்படுத்திவிட்டு கற்பதுக்கை அகழாய்வு செய்யும்போது அதனுடைய நீள அகலம் அதிகபட்சமாக கிழக்கு மேற்காக 2.80 மீட்டரும். வடக்கு தெற்காக 2.5 மீட்டரும் இருந்தது. கற்பதுக்கை கிழக்குப் புறமாக 57 சென்டிமீட்டர் அளவில் தமிழ் எழுத்து "ப வடிவில் அமைந்துள்ளது.

சுடுமண் குடுவைகள்
சுடுமண் குடுவைகள்

கற்பதுகையின் உள்பகுதியை அகழும் போது அதனுடைய அதிகபட்ச ஆழம் 1.42 மீட்டர் ஆக இருந்தது அதே ஆழத்தில் கீழ்வரும் ஈமச்சின்ன இடுபொருட்கள் கிடைத்தன. மூன்று கால்கள் உடைய ஐந்து சுடுமண் குடுவைகள் கிடைத்தன. அவை நீளம் 23 சென்டிமீட்டர் முதல் 30 சென்டி மீட்டர் வரையிலும் அகலம் 14 சென்டிமீட்டர் முதல் 17 சென்டி மீட்டர் வரையும் கிடைத்துள்ளது. நீள அகலம் முறையே 14. 15 சென்டிமீட்டர் அளவில் சிகப்பு வண்ண மண் பாணை ஒன்று கிடைத்துள்ளது.

கொற்கை அகழாய்வு - 9 அடுக்கு சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு!

அதனருகே கருஞ்சிவப்பு வண்ணத்தில் சுடுமண் தட்டு ஒன்று 20 சென்டிமீட்டர் வட்டவடிவிலான அளவில் கிடைத்துள்ளது. இதனிடையே ஒரு கருங்கல் முக்கோண வடிவில் ஒன்று கிடைத்துள்ளது. இதன் பயன் என்னவென்று அறிய முடியவில்லை, இதனுடைய நீளம் 35 சென்டிமீட்டர் அகலம் 15 சென்டிமீட்டர் வரை உள்ளது. அடையாளம் அறியமுடியாத செம்பினாலான 1.5 சென்டிமீட்டர் அளவில் இரு பொருட்கள் கிடைத்துள்ளன.

சுடுமண் குடுவைகள்
சுடுமண் குடுவைகள்

இரும்பினால் ஆன இரண்டு வாள்கள் கிடைத்துள்ளன. இவற்றின் நீளம் முறையே 87 78 சென்டி மீட்டர் ஆகும். மேலும் இரும்பிலான 2 கோடாரிகள் கிடைத்துள்ளன. இதன் நீளம் 26 மற்றும் 19 சென்டிமீட்டர், அகலம் 12 மற்றும் 9.5 சென்டிமீட்டர் ஆகும். மேலும் 52 சென்டிமீட்டர் அளவில் இரும்பிலான ஈட்டி முனை பகுதி ஒன்றும் கிடைத்துள்ளது" என்றார்.

பெருங்கற்காலம் என்பது இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் கிடைத்துள்ள இத்தொல்லியல் சின்னங்கள் அனைத்தும் பெருங்கற் காலத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இறந்து போனவர்கள் நினைவாக படையலிடப்பட்ட பொருட்களே இந்த மண் குடுவைகள்.

Last Updated :Jul 28, 2021, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.