இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: கணவன் - மனைவி உயிரிழப்பு

author img

By

Published : Jun 30, 2021, 7:33 AM IST

accident

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே கோயிலுக்குச் சென்று திரும்பிய தம்பதியின் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பெரியார் நகரில் வசிப்பவர் முரளி (40). இவரது மனைவி ராணி அம்மாள் (35). இந்த தம்பதியினர் சாமல்பள்ளம் முனியப்பன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளனர்.

அதன் பின், இந்த தம்பதி இருசக்கர வாகனத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது கோபசந்திரம் தட்சண திருப்பதி அருகே வரும்போது இருசக்கர வாகனம் மீது கார் ஒன்று வேகமாக வந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், முரளி - ராணி அம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

accident
உயிரிழந்த ராணி அம்மாள் - முரளி

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சூளகிரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த தம்பதியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத்தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிர்ச்சி வீடியோ: சொகுசு கார் மோதியதில் பம்பரம் போல் சுற்றிய ஆட்டோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.