5 மாவட்டங்களில் ரயில்வே மறுசீரமைப்பு பணி- தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆய்வு!

author img

By

Published : Nov 25, 2022, 1:50 PM IST

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ரயில்வே மறுசீரமைப்பு பணி- மேலாளர் ஆய்வு

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி உள்ளிட்ட ஐந்து ரயில்வே நிலையங்கள் மறுசீரமைப்பு பணிகள் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது, இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், காட்பாடி சந்திப்பு, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில்வே நிலையங்கள் மறுசீரமைப்புக்காக அண்மையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து இதில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி ரயில்வே நிலையத்தை உலக தரம் வாய்ந்த விமான நிலையம் போன்ற ஒரு நவீன வசதியுடன் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதற்காக கன்னியாகுமரி ரயில்வே நிலையம் மறு சீரமைப்புக்காக 49.36 கோடி ரூபாய் மதிப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான டெண்டர் பணிகளும் முடிவடைந்ததாக ரயில்வே நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியான ஆய்வு பணிகள் முடிந்ததும், இந்த பணிகள் தொடங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த பணிகளை ஆய்வு செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அவர்கள் இன்று (நவ.25) கன்னியாகுமரி வருகை தந்தார். கன்னியாகுமரி ரயில்வே நிலையம், மிக முக்கிய ரயில்வே நிலையமான நாகர்கோவில் ரயில் நிலையம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும், பள்ளிவிளை ரயில் நிலையங்களை ஆய்வு செய்தார்.

இந்நிலையில் நடைபெற உள்ள மறுசீரமைப்பு பணிகள் எதிர் வரும் 40 முதல் 60 ஆண்டுகள் வரை என்னென்ன வசதிகள் தேவைப்படுமோ அத்தனை வசதிகளும் இந்த மறு சீரமைப்பு திட்ட பணியில் இடம் பெற்றுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை திட்ட பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: சென்னை உள்பட 7 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் - கொலீஜியம் பரிந்துரை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.