சென்னையை அடுத்து நாகர்கோவிலில் இன்று ரயில்வே பணிமனை தொடக்க விழா..!

author img

By

Published : Sep 19, 2022, 5:22 PM IST

சென்னையை அடுத்து நாகர்கோவிலில் இன்று ரயில்வே பணிமனை தொடக்க விழா..!

சென்னையை அடுத்து மிக பெரிய ரயில்வே பணிமனையை நாகர்கோவிலில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.217 கோடி மதிப்பீட்டில் தென்னக ரயில்வே வாரியத்தின் பாதுகாப்புக்குழு கூடுதல் உறுப்பினர் திரு.மங்களா திறந்து வைத்துள்ளார்.

கன்னியாகுமரி: சென்னையில் மட்டும் தான் மிக பெரிய ரயில் பணிமனை இயங்கி வருகிறது. அதனை தொடர்ந்து இரண்டாவது பெரிய ரயில் பணிமனை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டு இன்று(செப்.19) திறப்பு விழா நடைபெற்றது.

தென்னக ரயில்வே சார்பில் ரூ.217 கோடி மதிப்பிலான பல்வேறு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலுக்கு வரும் ரயில்களை சுத்தம் செய்வது பிரேக் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக புதிய பணிமனை திறக்கப்பட்டுள்ளது. பணிமனையை ரயில்வே வாரியத்தின் பாதுகாப்புக்குழு கூடுதல் உறுப்பினர் திரு.மங்களா திறந்து வைத்தார்.

சென்னையை அடுத்து நாகர்கோவிலில் இன்று ரயில்வே பணிமனை தொடக்க விழா..!

கன்னியாகுமரியில் இருந்து நிஜாமுதீன் செல்லும் ரயிலை பணிமனைக்குள் கொண்டு வரப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் ரயில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதில் தென்னக ரயில்வே உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ரயில் பெட்டிகளில் பெரிய அளவில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என்றால் சென்னையை அடுத்து இனி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே நிலையங்களில் நடைபெறும் வகையில் அமைக்கபட்டு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்: அதனை போட்டுக்கொடுத்தால் ரூ.500 சன்மானம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.