ஊரடங்கில் தளர்வு: கொல்கத்தாவுக்குப் புறப்பட்ட குமரி அன்னாசி பழங்கள்!

author img

By

Published : Jul 10, 2021, 7:54 PM IST

pineapple

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்றுமுதல் கன்னியாகுமரியிலிருந்து கொல்கத்தாவிற்கு அன்னாசி பழங்கள் ஏற்றுமதி தொடங்கியுள்ளது

கன்னியாகுமரி: குலசேகரம், வெள்ளிமலை, சித்திரங்கோடு, பேச்சிப்பாறை, குமாரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராக ஆயிரக்கணக்கான ஏக்கரில் அன்னாசிப்பழம் பயிர் செய்யப்படுகிறது.

இந்த அன்னாசி பழங்கள் கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி இல்லாததால், வீணாக அழுகிப்போகும் நிலை உருவானது. இதனால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால், இன்றுமுதல் (ஜூலை 10) கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கொல்கத்தாவிற்கு அன்னாசி பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகின்றன.

அன்னாசி பழ சீசன் காலம் என்பதால் ஒரு கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யக்கூடும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.