காலாண்டு விடுமுறை... குமரி கடலில் குவிந்த மக்கள்...

author img

By

Published : Oct 2, 2022, 4:18 PM IST

Kanyakumari beach  tourists  tourists in kanyakumari  quarterly leave  காலாண்டு விடுமுறை  குமரி கடல்  கன்னியாகுமரி  சுற்றுலா தலம்

தமிழ்நாட்டில் பள்ளி காலாண்டு விடுமுறை தொடங்கி உள்ள நிலையில் சர்வதேச சுற்றுலா மையமான முக்கடல் சங்கமிக்கும் குமரி கடலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் தற்போது காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தலங்களில் மக்கள் குடும்பம் சென்று வருகின்றனர். அந்த வகையில், சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் திரிவேணி சங்கமத்தில் இருந்து உதயமாகும் சூரியனை கண்டுகளித்துடன் தங்களது செல்போனிலும் படம் பிடித்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

குமரி கடலில் குவிந்த மக்கள்

பின்னர் கடலில் நீராடி பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனத்தில் ஈடுபட்ட மக்கள் கடல் நடுவே அமைத்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் படகு மூலம் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: வீடியோ: "எட்டணா இருந்தா எட்டுரு எம்பாட்ட கேட்கும்" - மாணவர்களுடன் ஆடிப்பாடிய வடிவேலு...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.