ஆகஸ்ட்டில் கரோனா மூன்றாம் அலை!

author img

By

Published : Jul 14, 2021, 4:49 PM IST

ima-head-doctor-about-corona-third-phase

நாட்டில் கரோனா மூன்றாவது அலை வரும் ஆகஸ்ட் மாதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி : நாகர்கோவிலில் உள்ள பாரம்பரிய மருத்துவமனை ஒன்றில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை முகாமை இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ஜெயலால் இன்று (ஜூலை 14) திறந்துவைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”இந்தியா முழுவதும் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் பொதுமக்கள் கோயில் விழாக்கள் போன்றவற்றில் அதிகமாக கூடுவது தேவையற்றது. இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் கரோனா மூன்றாவது அலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதற்கு பொதுமக்கள் சுயக்கட்டுப்பாடு, தகுந்த இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். நீட் தேர்வை பொருத்தவரை சுமார் 15 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி அதில் 85 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்திய மருத்துவ சங்கத் தலைவர் ஜெயலால்
மேலும், வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் அதற்குரிய முடிவை அரசு விரைவாக எடுக்க வேண்டும்.
இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்த போதிலும் அடுத்த முறையாவது முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு இது பற்றிய முடிவை அறிவிக்கவேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: இளசுகளே உஷார்- கோவிட் 3ஆம் அலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.