குமரியில் களைகட்டத் தொடங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை!

author img

By

Published : Dec 1, 2022, 2:15 PM IST

Etv Bharatகன்னியாகுமரியில் களைகட்டத் தொடங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை

உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் வரும் டிச.25 ஆம் தேதி கொண்டாடுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரி: கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ஆம் தேதி கொண்டாட இருப்பதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்கூட்டியே அப்பண்டிகை களை கட்டத் தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள கடைகளில் வண்ண ஸ்டார்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. மேலும் கிறிஸ்து பிறப்பின் சிறப்பை பலருக்கும் அறிவிக்கும் விதமாக வீடுகள் தோறும் கிறிஸ்து பிறப்புகள் பாடல் பாடும் குழுவினர் வீடு வீடாக சென்று பாடத் தொடங்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கிறிஸ்து பிறப்பின் சிறப்பை பலருக்கும் அறிவிக்கும் விதமாக டிசம்பர் மாதம் முழுவதுமே அது சம்பந்தமான பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி சாலையில் எங்கு திரும்பினாலும் வண்ண வண்ண ஸ்டார்கள் ஒளிமயமாக கடைகளில் விற்பனைக்கு கட்டி தொங்கவிடபட்டுள்ளன.

கன்னியாகுமரியில் களைகட்டத் தொடங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை

அதேபோன்று வீடு வீடாக சென்று கிறிஸ்து பிறப்பினை அறிவிக்கும் வண்ணம் இயேசு பிறப்பு பாடல்களை பாடத் தொடங்கியுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்தில் கோலாகலமாக மாதத்தின் தொடக்கத்திலேயே தொடங்கி உள்ளது. கொரோனா காலம் என்பதால் இரண்டு ஆண்டுகளாக மந்த நிலையில் இருந்த கிறிஸ்துமஸ் பண்டிகை இந்த ஆண்டு மிகக் கோலாகலமாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

இதையும் படிங்க:பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.