கன்னியாகுமரி அருகே தனியார் எஸ்டேட்டில் சுற்றித்திறியும் யானைக்கூட்டம்!

author img

By

Published : Sep 22, 2022, 7:46 PM IST

கன்னியாகுமரி அருகே தனியார் எஸ்டேட்டில் சுற்றித்திறியும் யானை கூட்டம்...!

கன்னியாகுமரி கீரிப்பாறை அருகே அசிசி தனியார் எஸ்டேட் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைக்கூட்டம் புகுந்துள்ளது. அதனை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், வாளையத்துவயல் பகுதிகளில் தனியாருக்குச்சொந்தமான எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு வாழை, ரப்பர், கிராம்பு போன்றவை பயிரிடப்பட்டு வருகின்றன.

இந்தப்பகுதிகளில் அடிக்கடி யானைகள் கூட்டமாக வந்து வாழை மரங்கள், ரப்பர், கிராம்பு செடிகள் போன்றவற்றை நாசப்படுத்திவிட்டுச்செல்கின்றன. இதனால் இந்த யானைகளை காட்டு பகுதிக்குள் விரட்ட அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கன்னியாகுமரி அருகே தனியார் எஸ்டேட்டில் சுற்றித்திறியும் யானை கூட்டம்...!

இந்நிலையில் இன்று அசிசி தனியார் எஸ்டேட் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக புகுந்துள்ளன. இந்த யானைக் கூட்டத்தை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்ட முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த யானைக் கூட்டங்கள் இந்தப்பகுதியில் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:குன்னூரில் பகல் நேரத்தில் தெருக்களில் கரடிகள் உலா - மக்கள் அச்சம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.