காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் (35). ஏ.சி. மெக்கானிக்கான இவர் தனது நண்பர் சுரேஷிற்காக ட்ரோன் கேமரா வாங்க திட்டமிட்டார். அதன்பின் பிளிப்கார்ட்டில் ரூ.79,064 விலையுள்ள ட்ரோன் கேமிராவை ஆர்டர் செய்துள்ளார். அதோடு கிரெடிட் கார்ட் மூலம் செப்20ஆம் தேதி முழு பணத்தையும் செலுத்தியுள்ளார். அதன்பின் இன்று பார்சல் வந்துள்ளது. அந்த பார்சல் மிகவும் எடை குறைவாக வெறும் பெட்டி மட்டுமே இருப்பது போல இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த மொய்தீன், சுரேஷ் இருவரும் வீடியோ பதிவுடன் பார்சலை பிரித்தனர். அப்போது அந்த பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மொ கார் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் டெலிவரி செய்தவரை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. அதன்பின் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் மொய்தீன் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்துவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடக்குப்பட்டு அகழாய்வில் தங்க அணிகலன் கண்டெடுப்பு