தனியார் பள்ளியை அடித்து நொறுக்கிய வழக்கு - மேலும் மூவர் கைது

author img

By

Published : Sep 7, 2022, 7:25 AM IST

Etv Bharat Etv Bharat பள்ளியை அடித்து நொறுக்கிய வழக்கில் மூவர் கைது

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை அடித்து நொறுக்கிய வழக்கில் மேலும் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் காவல் நிலையத்திற்குட்பட்ட கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கினை புலனாய்வு செய்யும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்டு பள்ளியின் கட்டடத்தை இடித்து சேதப்படுத்திய நாகலூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (20), சதீஷ்பாபு (20) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், கலவரத்தின்போது காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்ட கனியாமூரைச் சேர்ந்த சின்னையன் (45) என்பவரையும் சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சியினை வைத்து அடையாளம் கண்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ரூ.1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்... டெல்லி போலீசார் அதிரடி நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.