கள்ளக்குறிச்சி: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் ,தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்வாகக் காரணங்களால் நேற்று மாலை வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மாணவர்கள் ஏமாற்றம்..!:
இதுதொடர்பாக தகவல் தெரியாத நிலையில், வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்காக சேலம்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுமற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் திரண்டனர்.
பின்னர் வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டதை அறிந்த இளைஞர்கள் கள்ளக்குறிச்சி சென்னை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சிக் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:அரசுப் பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் - இருவர் மீது வழக்குப்பதிவு