ஊராட்சி தேர்தல் நடத்த வேண்டாம் - மக்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Sep 24, 2021, 3:27 PM IST

சாலை மறியல் போராட்டம்

ஊராட்சித் தலைவர் பதவிக்காக போட்டியிட வேட்புமனு செய்த சுயேச்சை வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி: பரமநத்தம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்காக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் அனிதா சக்திவேல் என்பவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, பரமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தின்போது பரமநத்தம் ஊராட்சியில் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும், சுயேச்சை வேட்பாளரின் மனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுப்போயுள்ளது - இபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.