சாராய வியாபாரிகளுடன் தொடர்பு - சின்னசேலம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

author img

By

Published : Oct 5, 2022, 10:15 PM IST

Updated : Oct 6, 2022, 6:29 AM IST

Chinnasalem

சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த புகாரில், சின்னசேலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்திரசேகர். இவர் கடந்த ஓராண்டாக சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஆய்வாளர் சந்திரசேகர் சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் பகலவன், விசாரணை மேற்கொண்டதில், சந்திரசேகர் சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தது உறுதியானது.

இதையடுத்து காவல் ஆய்வாளர் சந்திரசேகரை பணியிடை நீக்கம் செய்ய எஸ்.பி பகலவன், விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியனிடம் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், சின்னசேலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிதம்பரத்தில் தொடரும் குழந்தைத் திருமணங்கள்; மணமுடித்த தீட்சிதருக்கு வலைவீச்சு

Last Updated :Oct 6, 2022, 6:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.