பறிமுதல் செய்யப்பட்ட கோயில் உண்டியல் காணிக்கை மீண்டும் ஒப்படைப்பு!

author img

By

Published : Mar 23, 2019, 11:41 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.91 லட்சம் கோயில் காணிக்கை என்று ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் மீண்டும் வங்கியிடமே அப்பணம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு கண்காணிப்பு, வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோவை பிரிவில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சத்தியமங்கலத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கிவந்த வங்கி பாதுகாப்பு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு பாதுகாப்பு அலுவலர்களுடன் கொண்டு செல்லப்பட்ட ரூ.91 லட்சம் ரொக்கத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததினால் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.91 லட்சம் ரூபாய் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அசோகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

உண்டியல் காணிக்கை

மேலும் பண்ணாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான வங்கி கணக்கு சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகரில் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ளதாகவும், அப்பணத்தை ஈரோட்டில் உள்ள மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மாற்றம் செய்ய கொண்டு செல்லப்பட்டதாகவும், பணத்திற்குறிய ஆவணங்கள் வங்கி அலுவலர்கள் பின்னால் வருகின்ற காரில் எடுத்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.91 லட்சம் ரூபாய் திரும்ப வங்கிக்கு ஒப்படைக்கப்பட்டது.


உரிய ஆவணமின்றி பறிமுதல் செய்த உண்டியல் காணிக்கை மீண்டும் ஒப்படைப்பு


TN_ERD_SATHY_02_23_MONEY_SEIZED_VIS_TN10009
(FTP இல் உள்ளது)  


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோவை பிரிவில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சத்தியமங்கலத்திலிருந்து கோபி நோக்கி வந்த வங்கி பாதுகாப்பு வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.91 லட்சத்தை பறிமுதல் செய்து கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு உரிய ஆவணIங்களை சமர்ப்பித்தால் உண்டில் காணிக்கை மீண்டும் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.


 
தமிழகத்தில் அடுத்த மாதம் 18ந்தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு கண்காணிப்புக்கள் மற்றும் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதன்அடிப்படையில் ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோவை பிரிவில்  பற்கும் படை அதிகாரி பவானி தலையில் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சத்தியமங்கலத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி வந்த வங்கி பாதுகாப்பு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் கொண்டு செல்லப்பட்ட ரூ.91 லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததினால் பறக்கும் படையினர் ரூ.91 லட்சத்தையும் பறிமுதல் செய்து கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அசோகனிடம் ஒப்படைத்தனர். மேலும் பண்ணாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான வங்கி கணக்கு சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன்நகரில் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ளதாகவும் அப்பணத்தை ஈரோட்டில் உள்ள மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு மாற்றம் செய்ய கொண்டுசெல்லப்பட்டதாகவும் பணத்திற்குறிய ஆவணங்கள் வங்கி அதிகாரிகள் பின்னால் காரில் எடுத்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொ1டரந்து  உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டதால்  பறிமுதல் செய்யப்பட்ட ரூ.91 லட்சமும் திரும்ப வங்கிக்கு ஒப்படைக்கப்பட்டது






ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.