விநாயகர் சதுர்த்தி: பூவன் வாழைத்தார் இருமடங்கு விலை உயர்வு

author img

By

Published : Sep 9, 2021, 12:01 PM IST

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் பூவன் ரக வாழைத்தார்கள் இருமடங்கு விலை உயர்ந்து ரூ. 600-க்கு விற்பனையானது உழவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ஈரோடு: ஈரோட்டின் புஞ்சைபுளியம்பட்டியில் வாரச்சந்தை வியாழக்கிழமை கூடுவது வழக்கம். இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக, வாழைத்தார்கள் விற்பனையில் மந்தநிலை காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி பண்டிகைகள் கொண்டாடப்படுவதையொட்டி வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து இன்று (செப்டம்பர் 9) இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தன.

கடந்தவாரம் சுமார் 18 கிலோ எடை கொண்ட பூவன் ரக வாழைத்தார் ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது இருமடங்கு விலை உயர்ந்து ரூ.600-க்கு விற்பனையானது. விலையேற்றத்தின் காரணமாக உழவர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: நட்சத்திர ஆமைகள் கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: இதுதான் முதல்முறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.