ஈரோடு ஐஆர்டிடி கல்லூரி மாணவி தூக்கிட்டுத்தற்கொலை - போலீஸ் தீவிர விசாரணை

author img

By

Published : Sep 16, 2022, 8:01 PM IST

Etv Bharat கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு பவானி அருகே அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு: பவானி அடுத்துள்ள சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் திருச்சி பெரியார் நகர் பகுதியைச்சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் வர்ஷா மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பயின்று வருகிறார். கல்லூரியில் தனி விடுதியில் தங்கி வரும் வர்ஷா நேற்று (செப். 15) இரவு உணவு சாப்பிட்ட பிறகு அறைக்கு வந்த அவர் திடீரென கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் முருகேசனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி முதல்வர் சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு ஈரோடு மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் கணேஸ்வரி, பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி, பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொன்னம்மா ஆகியோர் சென்று வர்ஷா தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர்.

மேலும், வர்ஷா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். தொடர்ந்து வர்ஷாவின் உடலை மீட்ட சித்தோடு காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மதுவுக்கு அடிமையான தம்பி; அவரது உடன்சுற்றிய நண்பரின் பைக்கை எரித்த அண்ணன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.