ஆடு திருடிய இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி கைது

author img

By

Published : Sep 27, 2021, 10:38 AM IST

கைது

சத்தியமங்கலம் அருகே பட்டப்பகலில் ஆடு திருடிய இந்து முன்னணி நிர்வாகியை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு: சத்தியமங்கலம் அருகேயுள்ள நாடார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (47). இவர் தனது தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்துவருகிறார்.

வடிவேலின் தங்கை சித்ரா நேற்று (செப். 26) வழக்கம்போல், வெள்ளாடுகளை அப்பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இரண்டு, இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் திடீரென வெள்ளாட்டுக் கிடாயைப் பிடித்து பைக்கில் வைத்துத் தப்ப முயன்றனர்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் வெள்ளாட்டைத் திருடிச் சென்ற இரண்டு நபர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து அடி-உதை கொடுத்தனர். தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சத்தியமங்கலம் காவல் துறையினர், ஆடு திருட முயன்ற இரண்டு பேரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (25), மனோரஞ்சன் (18) என்பதும், இவர்கள் ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில் ரஞ்சித் குமார் சத்தியமங்கலத்தில் இந்து முன்னணி அமைப்பின் முன்னாள் நகரச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தப்பிச் சென்ற மேலும் இருவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: கிராம பஞ்சாயத்தை பொது பிரிவினருக்கு அறிவிக்கக் கோரி வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.