கீழ்பவானி வாய்க்கால் - நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிப்பு!

author img

By

Published : Sep 19, 2021, 9:35 PM IST

கீழ்பவானி வாய்க்கால்

கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு 200 கன அடியிலிருந்து 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும், பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால், கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் போக நெல் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி, ஈரோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்புக் காரணமாக, பாசனத்திற்குத் திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கரை உடைப்பு சரி செய்யப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு மீண்டும் விநாடிக்கு 200 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது.

அதையடுத்து, இன்று (செப்.19) கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு 200 கன அடியிலிருந்து 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் திறப்பு படிப்படியாக 2,300 கனஅடி வரை அதிகரிக்கப்படும் எனப் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும் நீர்வரத்து 1841 கனஅடியாகவும், கீழ்பவானி வாய்க்காலில் 1000 கனஅடி நீரும்; அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் 800 கனஅடி நீரும் என 1800 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 30.31 டி.எம்.சி.

இதையும் படிங்க:சைதாப்பேட்டை தடுப்பூசி முகாமுக்கு முதலமைச்சர் திடீர் விசிட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.