"முள்முனையில் 3 குளம் வெட்டி வச்சேன்" - பாஜக குறித்து ஆ.ராசா பாடல்

author img

By

Published : Jan 24, 2023, 7:10 AM IST

முள்முனையில் 3 குளம் வெட்டி வச்சேன்.. பாஜக குறித்து ஆ.ராசா பாடல்!

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வருவது குறித்து முள்முனையில் 3 குளம் வெட்டி வெச்சேன் எனத் தொடங்கும் பாடலை நீலகிரி எம்பி ஆ.ராசா பாடி காட்டினார்.

ஈரோடு: நீலகிரி எம்பி ஆ.ராசா, நேற்று (ஜன.23) சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் 50 கோடி ரூபாய் செலவில் நிறைவு பெறும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து 10 கோடி ரூபாய் செலவில் புதிய பணிகள் தொடங்குவது குறித்து 10 இடங்களில் ஆய்வு செய்தார்.

நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர் சந்திப்பு

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, “சத்தியமங்கலம் நகர் முழுவதும் ஆய்வு செய்ததில், வரும் நிதியாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம், நீரேற்று நிலையம், தண்ணீர் தொட்டி என்று பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை உற்பத்தி மற்றும் அதனை மதிப்பு கூட்டி விற்பது குறித்து ஆய்வு செய்யப்படும். 100 நாள் திடடத்தில் மத்திய அரசு நிதியை தாமதமாக வழங்குவது குறித்து, திமுக எம்பிக்கள் வரும் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளோம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டிருப்பது, காங்கிரஸ் மேலிடம் எடுத்த முடிவு. அண்ணாமலை பாவம். கரோனாவுக்கு கோமியம் குடிக்க சொன்ன கட்சிதான் பாஜக. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வந்தால் என்பது, முடவன் கதைபோல உள்ளது” என்றார்.

அப்போது தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வருவது குறித்து, முள்முனையில் 3 குளம் வெட்டி வெச்சேன். அதில் 2 குளம் பாழ். ஒரு குளம் தண்ணீரே இல்லை. தண்ணீர் இல்லா குளத்தில் 3 பேரு. அதில் 2 பேருக்கு காது கேட்காது. ஒரு நாள் முடவன் என்ற பாடலை பாடி காட்டினார்.

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க பலம் வாய்ந்த கட்சி அதிமுக -அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.