Sexual Harassment: திண்டுக்கல் தனியார் கல்லூரி தாளாளர் மீது மேலும் 3 மாணவிகள் புகார்

author img

By

Published : Nov 22, 2021, 7:48 PM IST

Sexual Harassment: மேலும் 3 மாணவிகள் புகார்

திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி தாளாளர் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார் அளித்ததையடுத்து 5 தனிப்படை அமைத்து காவல் துறையினர் தாளாளரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திண்டுக்கல்: தனியார் கல்லூரி தாளாளர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததையடுத்து அக்கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பின்னர் சீல் வைக்கப்பட்டது. மேலும் தலைமறைவான தாளாளரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மூன்று மாணவிகள் புகார்

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட தாளாளர் மீது மேலும் 3 மாணவிகள் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதில் 2 மாணவிகள் 18 வயதுக்குள்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் தனித்தனியாக போக்சோ சட்டத்தின் (Pocso Act) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 18 வயது நிரம்பிய மாணவி அளித்த புகாரின் பேரில் ஐபிசி பிரிவு 506/1 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள தாளாளரை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தாளாளரின் நெருங்கிய தொடர்பில் இருந்த சிலரை தாடிக்கொம்பு காவல் துறை விசாரணை செய்து வருகிறது.

இதையும் படிங்க: Karur Sexual Harassment: குழந்தைக்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை - ஜோதிமணி எம்.பி. ஆதங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.