பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய கூடாது; தொமுச பொதுச்செயலாளர் சண்முகம்

author img

By

Published : Nov 22, 2021, 3:54 PM IST

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய கூடாது

பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து விற்பனை செய்து வரும் போக்கை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் என தொழிற்சங்க முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் நெய்வேலி தொழிற்சங்க முன்னேற்ற சங்கம் சார்பில் இரண்டு நாள்கள் தொழிற்சங்க தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

இன்று (செப்.22) நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு அதன் பொதுச் செயலாளரும் திமுக மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம் தலைமை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தற்போது தாரை வார்த்து வருகிறது. இதில் ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து விற்பனை செய்து வரும் போக்கை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய கூடாது

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய கூடாது

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளால் பிரதமர் சட்டங்களை திரும்பப் பெற்றார். அதேபோல் தொழிலாளர் விரோதப் போக்கு இருக்கக்கூடிய சட்டங்களையும் பிரதமர் திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய பொதுப்பணித் துறை மண்டலம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.