பழனியில் தைப்பூச திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

author img

By

Published : Jan 12, 2022, 10:48 AM IST

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது , palani murugan temple Thaipusam festival celebration begins

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று (ஜனவரி 12) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல்: பழனி பெரிய நாயகி அம்மன் கோயிலில் இன்று காலை 6.30மணிக்குமேல் யாக வேள்வியுடன் வேதமந்திரங்கள் முழங்கக் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்று.

முதலில், கொடிமரத்திற்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி- வள்ளி, தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்
பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் தைப்பூசக் கொடியேற்றம் நடைபெற்றது.

பழனியில் தைப்பூசத் திருவிழா
பழனியில் தைப்பூசத் திருவிழா

இன்று முதல் 10நாட்களுக்கு நடைபெறக்கூடிய தைப்பூசத் திருவிழாவின் 6ஆம் நாளான ஜனவரி 17ஆம் தேதி திருக்கல்யாணமும், 7ஆம் நாளான ஜனவரி 18ஆம் தேதி தைப்பூசத் திருத்தேரோட்டம் ஆகிய நிகழ்வுகளுக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்; வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...

தைப்பூசத் திருவிழா குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தைப்பூசத் திருவிழா நடைபெறும் ஜனவரி 14ஆம் தேதிமுதல் 18ஆம் தேதிவரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. தைப்பூசத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

அதேபோல் திருவிழாவின்போது தினசரி நடைபெறும் நிகழ்ச்சி, திருக்கல்யாணம், தேரோட்டம், தெப்ப உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள், மண்டகப்படிதாரர்களுக்கு அனுமதி இல்லை.

பழனியில் தைப்பூசத் திருவிழா
பழனியில் தைப்பூசத் திருவிழா

தைப்பூசத் திருவிழா நிகழ்ச்சிகள் ஆகம விதிப்படி கோயில் ஊழியர்களை கொண்டு நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிகளை வலைதளம், யூ-ட்யூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியின் அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி தைப்பூசத்தி திருவிழா மிகவும் சிறப்புடையது. இந்தத் தைப்பூசத் திருவிழாவின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் நேரலையாக ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை பக்தர்கள், Arulmigu Dhandayuthapaniswamy Temple, Palani - என்ற YouTube channel மூலம் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி அருள்பெறலாம்.

மேற்படி, இந்தத் தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டு அனைவரும் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி வழிபாட்டினை நேரலையில் கண்டு இறையருள் பெறவும் உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா: பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமா திமுக அரசு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.