நாயை "நாய்" எனக் கூறியதால் விவசாயி படுகொலை

author img

By

Published : Jan 20, 2023, 9:59 PM IST

Updated : Jan 21, 2023, 5:02 PM IST

திண்டுக்கல்லில் பயங்கரம்..! நாயை நாய் எனக் கூறியதால் விவசாயி படுகொலை!

திண்டுக்கல் அருகே வீட்டில் வளர்க்கும் நாயை "நாய்" எனக் கூறியதால் ஆத்திரத்தில், அண்டை வீட்டுக்காரரை ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்: மறவம்பட்டி உலகம்பட்டியார் தோட்டத்தைச் சேர்ந்த 65 வயதான ராயப்பன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் நேற்று(20.01.2023) உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பாக அண்டை வீட்டுக்காரரான டேனியல்(21), என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கொலை தொடர்பாக போலீசார் அளித்த தகவலின்படி, ராயப்பனும் வின்சென்ட்டும் உறவினர்கள். சம்பவத்தன்று ராயப்பன் தனது பேரனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வின்சென்ட் வளர்த்து வரும் நாய்கள் ராயப்பனை நோக்கி குரைத்தவாறு ஓடி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து "போ நாயே" என அவைகளை நோக்கி கூறிய ராயப்பன், நாய்களை விரட்ட கம்பு எடுத்துவருமாறு தனது பேரனிடம் கூறியுள்ளார்.

தன்னுடைய நாயை நாய் என்று எப்படி கூறலாம் என வின்சென்ட் வாக்குவாதம் செய்துள்ளார். அவருடன் இருந்த தம்பி டேனியலும் சண்டையிட்டுள்ளார். அப்போது டேனியல் தன்னிடம் இருந்த கத்தியால் ராயப்பனின் மார்பில் குத்தியதாக போலீசார் கூறியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ராயப்பன் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கொலை செய்ததாக டேனியலும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வின்சென்ட் மற்றும் சவரியம்மாள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி.. கோவையில் கட்டண மோசடியில் ஈடுபட்ட வனவர் பணியிடை நீக்கம்..

Last Updated :Jan 21, 2023, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.