கொடைக்கானலில் கொய்யா பழங்களைத் தாக்கும் நோய்; விவசாயிகள் வேதனை

author img

By

Published : Dec 5, 2022, 4:48 PM IST

கொடைக்கானலில் கொய்யா பழங்களை தாக்கும் நோய்

கொடைக்கானலில் கொய்யா பழங்களைத் தாக்கும் நோயால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்: கொடைக்கானலில் மேல்மலை மற்றும் கீழ்மலைக் கிராமங்களில் அதிக அளவில் விவசாயமே மேற்கொண்டு வருகின்றனர். இங்கு பல்வேறு காய்கறிகள் மட்டுமின்றி, பழ வகை விவசாயமும் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில், தற்போது அதிக அளவில் கொய்யா பழங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது கொடைக்கானலில் பெய்து வரும் மழையின் காரணமாக கொய்யா பழங்களில் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விளைச்சல் பாதிப்பு அடைந்து வருவதாக விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர். எனவே தோட்டக்கலைத் துறையினர், நோய்த் தாக்கத்திலிருந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானலில் கொய்யா பழங்களை தாக்கும் நோய்

இதையும் படிங்க: தொழில்பேட்டை அமைக்க எதிர்ப்பு: கோவையில் விவசாயிகள் நடைபயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.