உலக சாதனை படைக்க கர்நாடகா செல்லும் திண்டுக்கல் மாணவர்கள்

author img

By

Published : Sep 20, 2021, 6:18 AM IST

world record  Karnataka  Dindigul students  Dindigul students going to Karnataka to participate in world record  Dindigul news  Dindigul latest news  உலக சாதனை  சாதனை  உலக சாதனை படைக்க கர்நாடகா செல்லும் திண்டுக்கல் மாணவர்கள்  மாணவர்கள்  உலக சாதனை படைக்க கர்நாடக செல்லும் மாணவர்கள்

கர்நாடகாவில் நடைபெறும் 81 மணி நேர சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திண்டுக்கல்லைச் சேர்ந்த 21 மாணவர்கள் கர்நாடகாவிற்குச் செல்கின்றனர்.

திண்டுக்கல்: சாதனையாளர்கள் எப்போதும் சரித்திரம் படைக்க நினைப்பார்கள். அந்த வகையில் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சிப் பெற்ற ஸ்கேட்டிங் மாணவர்கள் உலகச் சாதனைக்காக கர்நாடகா மாநிலம் செல்கின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காமில் 81 மணி நேர ஸ்கேட்டிங் உலக சாகச நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 18 மாணவர்களும், 3 மாணவிகளும் பங்கேற்கின்றனர். இவர்கள் உலக சாதனை நிகழ்த்த உள்ளதை பலரும் வாழ்த்தி வரவேற்றனர்.

உலகச் சாதனைப் படைக்க இருக்கும் திண்டுக்கல் மாணவர்கள்

சாதனைப் படைக்கச் செல்லும் மாணவர்கள்

சின்னாளபட்டியில் நடந்த விழாவில் இவர்கள் அனைவரையும் வெற்றிபெற மாஸ்டர் பிரேம்நாத், உலக ஸ்கேட்டிங் ரோல் பால் தமிழ்நாடு சாம்பியன் விஜய வர்ஷினி, கண்மணி, ரோல்பால் ஸ்கேட்டிங் கேப்டன் தீபக் ராஜ், கோச் சக்திவேல் உள்பட பலர் வாழ்த்தினர்.

சாகச நிகழ்ச்சிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளை பெற்றோரும் ஆரத்தழுவி தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இது குறித்து மாணவ மாணவிகள் கூறியதாவது, “81 மணி நேரம் நாங்கள் சோர்வில்லாமல், தொய்வில்லாமல், ஓய்வில்லாமல், ஸ்கேட்டிங் செய்து சாதனைப் படைக்க உள்ளோம்.

இது உலகச் சாதனை என்று நினைக்கும்போது எங்களுக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. எங்களுக்கு இந்த அளவுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், பெற்றோரையும் வணங்கி இந்தப் போட்டியில் பங்கேற்கிறோம்” என்றனர்.

இதையும் படிங்க: சிலம்பத்திற்கு அங்கீகாரம்; தமிழினத்திற்கு பெருமை - நிறைவேறிய முதலமைச்சரின் முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.